Sunday, January 9, 2011

பாகிஸ்தான் அபார வெற்றி



ஹேமில்டனில் நடைபெற்ற நியூஸிலாந்து - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி அபாரமாக வெற்றி பெற்றது.

நியூஸிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸில் 275 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. பாகிஸ்தான் பந்து வீச்சாளர் ரஹ்மான், அகமத் ஆகியோர் சிறப்பாக பந்து வீசினர்.

அதனைத் தொடர்ந்து பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்ஸில் 367 ரன்கள் எடுத்தது. ஆனால், நியூஸிலாந்து அணி 2வது இன்னிங்ஸில் 110 ரன்களுக்கே ஆட்டமிழந்தது.

பாகிஸ்தான் வீரர்களின் அபார பந்து வீச்சால் நியூஸிலாந்திற்கு இந்த நிலைக்குலைவு ஏற்பட்டது. பிரண்டன் மெக்கல்லம் மட்டும் 35 ரன்கள் எடுத்தார்.

19 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் களமிறங்கிய பாகிஸ்தான் துவக்க ஆட்டக்காரர்கள், 3.4 ஓவர்களில் 21 ரன்கள் எடுத்தனர்.

இதையடுத்து முதல் டெஸ்ட்டில் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்று முன்னிலை பெற்றுள்ளது. ஆட்ட நாயகனாக பா‌கி‌ஸ்தா‌ன் பந்து வீச்சாளர் அப்துல் ரஹ்மான் தேர்வு செய்யப்பட்டார்.

Related Article:

0 comments:

Post a Comment


 
Copyright 2010 யாழின் விடியல். All rights reserved.
Themes by Bonard Alfin l Home Recording l Distorsi Blog